ஆளுமை:ரிம்ஸா, முஹம்மத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரிம்ஸா
தந்தை முஹம்மத்
தாய் லரீபா
பிறப்பு 1978.04.20
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத்; இவரது தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார்.

இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான ‘சமாதானமே வா’ சூரியன் FM இல் இடம்பெற்றதிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நேர்காணல்கள் மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசையில் உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரியில் செந்தூரம் இதழ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 28-31
  • நூலக எண்: 1029 பக்கங்கள் 15