"ஆளுமை:வாசுகி, ஜெகதீஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:வாசுகி ஜெகதீஸ்வரன், ஆளுமை:வாசுகி, ஜெகதீஸ்வரன் என்ற தலைப்புக்கு நகர்த்...)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=வாசுகி, ஜெகதீஸ்வரன்|
 
பெயர்=வாசுகி, ஜெகதீஸ்வரன்|
 
தந்தை=சண்முகம்பிள்ளை|
 
தந்தை=சண்முகம்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வாசுகி, ஜெகதீஸ்வரன் (1957.03.19 - ) கொழும்பைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; இவரது தாய் விஜயலஷ்மி. இவர் இலங்கையில் தனது கல்விப் பயிற்சியை முடித்து நாட்டியக் கலையின் பல்வேறு வடிவங்களைத் தஞ்சாவூர் ஶ்ரீமதி ஜெகதாம்பாள், பத்மஶ்ரீ அடையார் லக்‌ஷ்மணன், சாந்தா தனஞ்சயன், கலைமாமணி இராஜரத்தினம்பிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் பரதசூடாமணி நடனத்திலும் நட்டுவாங்கத்திலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
+
வாசுகி, ஜெகதீஸ்வரன் (1957.03.19 - ) கொழும்பைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; தாய் விஜயலஷ்மி. இவர் இலங்கையில் தனது கல்விப் பயிற்சியை முடித்து நாட்டியக் கலையின் பல்வேறு வடிவங்களைத் தஞ்சாவூர் ஶ்ரீமதி ஜெகதாம்பாள், பத்மஶ்ரீ அடையார் லக்‌ஷ்மணன், சாந்தா தனஞ்சயன், கலைமாமணி இராஜரத்தினம்பிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் பரதசூடாமணி நடனத்திலும் நட்டுவாங்கத்திலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
  
 
இவர் இலங்கையின் பல பாகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தனி நிகழ்ச்சிகளை அளித்துப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். இவருக்கு 1985 ஆம் ஆண்டு பங்களாதேஷ், டாக்கா நகரில் நடைபெற்ற தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் (SARC) மாநாட்டில் நடன நிகழ்ச்சியை அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது நிகழ்ச்சி  1986 ஆம் ஆண்டு கனடா நாட்டின் வன்குவார் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ (EXPO) கண்காட்சியில் அரங்கேறியது.
 
இவர் இலங்கையின் பல பாகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தனி நிகழ்ச்சிகளை அளித்துப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். இவருக்கு 1985 ஆம் ஆண்டு பங்களாதேஷ், டாக்கா நகரில் நடைபெற்ற தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் (SARC) மாநாட்டில் நடன நிகழ்ச்சியை அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது நிகழ்ச்சி  1986 ஆம் ஆண்டு கனடா நாட்டின் வன்குவார் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ (EXPO) கண்காட்சியில் அரங்கேறியது.

01:47, 4 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வாசுகி, ஜெகதீஸ்வரன்
தந்தை சண்முகம்பிள்ளை
தாய் விஜயலஷ்மி
பிறப்பு 1957.03.19
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுகி, ஜெகதீஸ்வரன் (1957.03.19 - ) கொழும்பைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; தாய் விஜயலஷ்மி. இவர் இலங்கையில் தனது கல்விப் பயிற்சியை முடித்து நாட்டியக் கலையின் பல்வேறு வடிவங்களைத் தஞ்சாவூர் ஶ்ரீமதி ஜெகதாம்பாள், பத்மஶ்ரீ அடையார் லக்‌ஷ்மணன், சாந்தா தனஞ்சயன், கலைமாமணி இராஜரத்தினம்பிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் பரதசூடாமணி நடனத்திலும் நட்டுவாங்கத்திலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

இவர் இலங்கையின் பல பாகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தனி நிகழ்ச்சிகளை அளித்துப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். இவருக்கு 1985 ஆம் ஆண்டு பங்களாதேஷ், டாக்கா நகரில் நடைபெற்ற தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் (SARC) மாநாட்டில் நடன நிகழ்ச்சியை அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது நிகழ்ச்சி 1986 ஆம் ஆண்டு கனடா நாட்டின் வன்குவார் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ (EXPO) கண்காட்சியில் அரங்கேறியது.

இவர் சக்தி, கிருஷ்ணாமிர்தம், நடேஷ்வர அஞ்சலி, ஏழுவகைத் தாண்டவம், திருநாவுக்கரசர், சித்திரைப் பெண், அஷ்டலக்‌ஷ்மி, நவசக்தி, வசந்தோற்சவம், சிற்பியின் கனவு, சகுந்தலை, நள தமயந்தி, மீனாட்சி கல்யாணம், தைத்திருநாள், தீபாவளி வந்தது, மனிதனின் ஏழு பருவங்கள், சாவித்திரி, கண்ணகி, சாந்த சொரூபி, தமிழ் அன்னைக்கு அணிகலன்கள், சிவதரிசனம், வானவில்லின் வர்ணங்கள் ஏழு என்பர் ஆனால், பரதநாட்டியக் கலை வானில் முதலான கலைக்கோலங்களைத் தாமே தயாரித்து நெறிப்படுத்தியுள்ளார்.

இவரது ஆளுமைகளையும் சேவைகளையும் பாராட்டி இலங்கை அரசின் 'கலாசூரி', விருதும் பரத பூஷண திலகம், நர்த்தன நாயகி, நடனக் கலையரசி, கலைச்செம்மல், இரத்தின தீபம் ஆகிய கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 88-95