ஆளுமை:ஸெயின், உதுமாலெப்பை

From நூலகம்
Name ஸெயின்
Pages இஸ்மான்கண்டு உதுமாலெப்பை
Pages இஸ்மாலெவ்வை பாத்திமா
Birth 1940.06.18
Place அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸெயின், இஸ்மான்கண்டு உதுமாலெப்பை (1940.06.18 - ) அம்பாறை, சம்மாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை இஸ்மான்கண்டு உதுமாலெப்பை; தாய் இஸ்மாலெவ்வை பாத்திமா. மட்/ அ.மு.க. பாடசாலை, மட்/ அரசினர் சிரேஸ்ட பாடசாலை, மட்/ விபுலானந்த மகா வித்தியாலயம், அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான 'கன்னத்தில் முத்தம்' கிராமியச் சித்திரமாக சுதந்திரன் பத்திரிகையில் 1958 இல் பிரசுரமானது. தொடர்ந்து சம்மாந்துறைவன், புரட்சிமாறன், கலைவேள் மாறன் ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், உருவகக்கதைகள், வில்லுப்பாட்டு, சிறுகதைகள், நாடகங்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இனிக்கும் தமிழ் இலக்கியம் (இரண்டு தொகுதிகள்), இரத்த நரம்புகள் கவிதை) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். நூறுக்கும் அதிகமான நாடகங்களை எழுதியுள்ளார். கலாபூஷணம், கலைவேள் போன்ற பட்டங்கைப் பெற்றவர்.

Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 86-89


வெளி இணைப்புக்கள்