நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
Name | யாழ்/ புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
பழங்காலத்தில் இளந்தாரி நாச்சிமார் கோவில் என அழக்கப்பட்ட மடத்துவெளி வயலூர் பாலசுப்பிரமணிய கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளி நாச்சியார் என்னும் பெண்மணி அயல் கிராமத்திலிருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் தனது கணவரின் வீட்டின் முன்புற வயலில் இறங்கியபோது அவ்வயல் சொந்தக்காரர் அவளை வயலில் இறங்கவிடாது தடுத்ததோடு நீர் புகுந்த வீடு வாழும் தரமுடையதல்ல என ஏளனமாகப் பேசியதாகவும் இதனால் மனமுடைந்த இவள் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் பார்க்கும் இம்மண்ணிற்கு தான் மருமகளாக இருக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தனது தாலியைக் கழற்றி தான் நின்ற வரம்பில் காணப்பட்ட கல் ஒன்றின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டுப் பிறந்த ஊருக்கு சென்றதாகவும் இதனால் வேதனையுற்ற இவரது கணவர் சாதியெனும் பெயரால் தான் தாழ்த்தி ஒடுக்கப்படும் நிலை தனது மனைவிக்கும் ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்தில் அத்தாலி இருந்த கல்லையே நாச்சியாராகப் பாவனை செய்து வழிப்பட்டு வந்ததாகவும் அவர் மறுமணம் செய்யாது நாச்சியாரை வழிபட்டு வந்தமையால் இளந்தாரி நாச்சிமார் கோவில் என்னும் பெயர் இக் கோவிலுக்கு வந்ததாகவும், இக் கோவில் வரலாறு கூறுகின்றது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 100-102