பகுப்பு:தாயக ஒலி

From நூலகம்

'தாயக ஒலி' இதழானது இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தினதும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தினதும் இணைந்த வெளியீடாகும். 2013ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு "இணுவில் ஒலி" எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதன் 8வது இதழிலிருந்து தாயக ஒலி எனும் பெயரில் இருமாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆவார்.

இதழின் உள்ளடக்கத்தில் பல்துறை சார்ந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள், ஆரோக்கிய குறிப்புக்கள், நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் என்பவற்றுடன் நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- 9-2/1,நெல்சன் பிளேஸ், கொழும்பு-06, இலங்கை. E-mail:-thayakaoli@gmail.com