ஆளுமை:இந்திரகுமார், இராசு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:15, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்திரகுமார்
தந்தை இராசு
பிறப்பு 1959.07.31
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், இராசு (1959.07.31 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை இராசு. தனது ஆரம்பக் கல்வியை மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கற்ற இவர், தனது தந்தையாரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று தனது 12 ஆவது வயதிலிருந்து நாதஸ்வர இசையை வழங்கி வருகின்றார். தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மயிலணி முருகமூர்த்தி ஆலயம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து 2004 ஆம் ஆண்டு வலிகாமம் மேற்கு கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83