ஆளுமை:இராஜநாயகன், சுந்தரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசநாயகன், சு.
பிறப்பு 1926.06.27
இறப்பு 1998.04.24
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.இரசநாயகன் (1926.06.27 - 1998.04.24) யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வாழ்விடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். நாவல்கள், கட்டுரைகள் எழுதுவதில் ஆற்றல் மிக்க இவர் நாற்பதுகளில் ஈழகேசரி பத்திரிகை மூலம் படைப்புத் துறைக்குள் நுழைந்து முதலிரவு, இதயத்துடிப்பு, வேதனைச்சுடர் அக்கிய சிறுகதைகளை அப்பத்திரிகை வாயிலாக வெளிக்கொணர்ந்தார். அறுபதுகளில் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இவரது பிரியாணி என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்றது. அத்தோடு இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சொந்தமண் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 127-128
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 39