ஆளுமை:கருணாகரன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:19, 2 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரன்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1934.09.20
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், சுப்பிரமணியம் (1934.09.20) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கிராம அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்தார்.

புங்குடுதீவுக்கு மின்சாரம் வந்த போது புங்குடுதீவு மகாவித்தியாலயம் முழுவதற்கும் தனது சொந்தச் செலவில் மின் இணைப்பைச் செய்து கொடுத்தார். 1984 முதல் 1989 வரை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு பல சமூகச் சேவைகளையும் ஆற்றியுள்ளார். 1972 காலப்பகுதியில் கடல் நீர் தரைப்பகுதிக்கு வராமலும் அதிகமான மழை நீர் கடலுக்குச் செல்லாமலும் தடுக்கக் கள்ளியாறு அணைத்திட்டத்தைச் செயற்படுத்தினார். புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையில் அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து வைத்தியசாலை புனரமைப்பில் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 214-215