ஆளுமை:சோதிகா, ரெத்தினேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 26 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோதிகா
தந்தை ரெத்தினேஸ்வரன்
பிறப்பு
ஊர் கொக்குவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோதிகா, ரெத்தினேஸ்வரன் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ரெத்தினேஸ்வரன்; ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வணிகப் பிரிவில் கல்வி கற்கும் எழுத்தாளர் சிறு வயது முதல் பாடசாலைகளில் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாடசாலை மேசைகளில் இவரின் கிறுக்கலே கவிதைகள் எழுத தன்னை தூண்டியதாகத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். ஆகிஷாவின் அர்த்தங்கள் எனும்பெயரில் முகநூலில் கவிதை எழுதி வரும் எழுத்தாளர் itr Swiss fm எனும் வானொலியில் இவரின் கவிதை இதயம் பேசியதே நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டு முதல் முதலில் ஒலிபரப்பப்பட்டது. உலக சாதனை நூல் வெளியீடான 1300 கவிதைத் தொகுப்பு நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. Future Kalam, Universal achieve certificate கிடைக்கப்பெற்றள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த இவரின் தாயின் ஒத்துழைப்பே தனது எழுத்துத்துறை பிரவேசத்திற்கான காரணமென்கிறார் எழுத்தாளர். தனது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் தனது கவிதைகளை நூலாக வெளியிட எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.


குறிப்பு : மேற்படி பதிவு சோதிகா, ரெத்தினேஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.