ஆளுமை:மகாலிங்கம், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகாலிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கம்
தந்தை பொன்னம்பலம்
தாய் -
பிறப்பு 1952
ஊர் கிளிநொச்சி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், பொன்னம்பலம் (1952 - ) கிளிநொச்சி, செல்லியாதீவைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் சிறுவயது முதல் தந்தையின் கலைப் பயணத்தில் இணைந்திருந்தார். தந்தையினுடைய காத்தான் கூத்து நாடகத்தில் 12 வயதுச் சிறுவனாக நடித்தார். கிளிநொச்சி மாவட்டம் திக்குவில் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு கூத்து பழக்கி அங்குள்ள பிள்ளையார் கோயிலில் சிவராத்திரி விழாவில் மேடையேற்றிய போது பக்தர்கள் பாராட்டினார்கள்.இவரது கலைப் பணியையும் கலைப்படைப்பின் ஆற்றலையும் பாடல் சிறப்பினையும் கண்ணுற்ற அந்த ஆலயத்தின் பரிபாலனசபை தங்கப் பரிசு வழங்கி கௌரவித்தது.

ஜெயபுரம் வழி பிள்ளையார் கோயில், ,திக்குவில் அய்யனார் கோயில் ,கிராஞ்சி பிள்ளையார் கோயில், ஜெயபுரம் காளி கோவில் போன்ற 5 இடங்களில் இவரது கூத்து மேடை ஏற்றப்பட்டது. அண்ணாவியின் திறமையைப் பாராட்டி நகைபோடும் அக்காலத்து வழமைக்கு ஒப்ப அண்ணாவி மகாலிங்கத்திற்கு மோதிரம் போடப்பட்டது. மட்டுவில்நாடு மேற்கு நெற்நிலவு நடிகர்கள் சிலர் இத்தகவலை கூறினார்கள்.