ஆளுமை:உவைஸ், முகம்மது லெவ்வை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:40, 8 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உவைஸ்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உவைஸ்
தந்தை முகம்மது லெவ்வை
தாய் செய்நம்பு நாச்சியார்
பிறப்பு
ஊர் ஹேனமுல்ல, பாணந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உவைஸ், முகம்மது லெவ்வை பாணந்துறை, ஹேனமுல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது லெவ்வை; தாய் செய்நம்பு நாச்சியார். 1946இல் உயர் கல்வியை கற்ற இவர் 1949இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கலைமாணிப்பட்டத்தையும் 1951இல் முதுகலைமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். 1959இல் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகி நவீன கீழைத்தேய மொழித்துறையின் தலைவராகவும், 1979இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேராசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் இவரது முதுகலைமாணிப்பட்ட ஆய்வு ஏட்டில் இருநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியங்களை இவர் பயன்படுத்தினார். மேலும் கலாநிதிப்பட்டத்திற்காக தமிழ் இலக்கிய அரபுச் சொல் அகராதி என்னும் அகராதி நூலையும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் இலக்கிய வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார்.

மதுரைத்தமிழ் சங்கத்து புலவராற்றுப்படை, புத்தூஹுஷ்ஷாம், ஆசாரக்கோவை, திருமக்காக்கோவை ஆகியன இவரால் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூல்களாகும். இஸ்லாம் சமயம் சார்ந்த இலக்கியங்கள் பற்றிய கருத்துக்களை தினகரன் வார மஞ்சரியில் எழுதி இஸ்லாம் சமயக்கருத்துக்களை அறியச் செய்தார். இவை பின்னர் இஸ்லாமும் இன்பத்தமிழும் எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 10-11