ஆளுமை:சித்தி அமரசிங்கம், தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி அமரசிங்கம்
பிறப்பு 1937.01.05
இறப்பு 2007.01
ஊர் திருகோணமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி அமரசிங்கம் (1937.01.05 - 2007.01) திருகோணமலையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளதோடு ஆவணப்படுத்தல், நாடகம், திரைப்படம், ஆக்க இலக்கியம், பதிப்புத்துறை, நூல்வெளியீடு ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.


ஒற்றைப்பனை, கோயிலும் சுனையும், கயல் விழி, சாரணர் புதிய செயற்றிட்டம், 93ல் கலை இலக்கிய ஆய்வு, இராவண தரிசனம், கங்கைக் காவியம், கழகப் புலவர் பெ.பொ.சி கவிதைகள், சிந்தித்தால், இரு நாடகங்கள், திருப்பல்லாண்டு உட்பட மேலும் பல ஆக்கங்களை இவர் படைத்துள்ளார். கலாபூஷணம், கலாவிநோதன், கலை விருதன் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 107-111
  • நூலக எண்: 2074 பக்கங்கள் 22-26